புஷ்பாஞ்சலி
யத்தனபூடி சுலோச்சனா ராணி எழுதிய புஷ்பாஞ்சலி - காதல், இழப்பு, மற்றும் வாழ்க்கையின் திருப்பங்களை விவரிக்கும் ஒரு அழகான நாவல். தெலுங்கு நாவலின் தமிழாக்கம் இது.
| Category | Translation |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 248 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
கதையின் நாயகன் மாதவன் சுதந்திரப் போராட்டத்தில் எதிரிகளிடம் சிக்கி இறந்து போனதாகத் தகவல் வருகிறது. அவனுடைய மாமன் மகள் சுதாவுக்கு வேறு ஒருத்தனுடன் திருமணம் முடிந்து விடுகிறது. அந்த ஏமாற்றத்தில் மனமும், உடலும் திசை மாறிய நிலையில் ரயிலில் தனிமையில் சிக்கிய இளம் பெண்ணிடம் வழி தவறி நடந்து கொண்டு விடுகிறான் நாயகன்.
பிறகு தவறை உணர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ரயிலை விட்டு இறங்குகிறான். அவன் எதிர்பாராத தருணத்தில் ரயில் கிளம்பி விடுகிறது.
அந்தப் பெண்ணைத் திரும்பவும் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நினைக்கிறான். அவன் எண்ணம் நிறைவேறியதா? அவன் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்ததா?
பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்களின் படைப்பான "Vijetha"வின் தமிழாக்கம் "புஷ்பாஞ்சலி."