கடவுளின் நிறம் வெண்மை
52 புனிதர்களின் சரிதம்
எஸ். கே. முருகன் எழுதிய கடவுளின் நிறம் வெண்மை - வாழ்க்கையின் வெற்றி, நிம்மதி மற்றும் குழப்பங்களை விரட்டும் வழிகாட்டி. ஆன்மீகத் தேடலுக்கான சிறந்த புத்தகம்!
| Category | Religion |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 336 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
Description
விருதுநகரைச் சேர்ந்தவர். பத்திரிகையாளராக, எழுத்தாளராக மற்றும் மனநல ஆலோசகராக வலம் வருபவர். மனைவி ஜோதி, மகன் நிர்மல், மகள் நிலா ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறார். ‘மந்திரச் சொல்’, ‘ஞானகுரு’ போன்ற தொடர்களை விகடன் இதழ்களில் எழுதி இருக்கிறார். இவை தவிர, ‘தலையணை மந்திரம்’, ‘வெற்றி தரும் மந்திரம்’, ‘பெருந்தலைவர் காமராஜர், ‘லவ்வாலஜி’, ‘எளிய தமிழில் சித்தர் மருத்துவம்’ போன்ற நூல்கள் வெளியாகி உள்ளன.
‘வாழ்வின் வெற்றிக்கும் நிம்மதிக்கும் தேவையான அத்தனை வழிகளும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிரம்பி வழிகின்றன. அவற்றில் இருந்து சில துளிகளை மட்டுமே, ‘கடவுளின் நிறம் வெண்மை’ நூலில் எடுத்துக் காட்டியுள்ளேன். குழப்பம், சங்கடம் போன்றவற்றை விரட்டும் சக்தியும் இந்த நூலுக்கு உண்டு’ என்கிறார் எஸ்.கே.முருகன்.
உங்களுக்கும் பிடித்துப் போகும்! படித்துப் பாருங்கள்...