Skip to content

வண்ணநிலவன் கவிதைகள்

வண்ணநிலவன் எழுதிய வண்ணநிலவன் கவிதைகள் - ஆழமான கவிதைகள், சமூகப் பார்வை, மற்றும் தனித்துவமான உணர்வுகளை அனுபவியுங்கள். சிறந்த தமிழ் இலக்கியம் இங்கே!

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 72
Year 2020
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

அவரைப் படைப்பாளி என்கிறார்கள்
இவரை ஆளுமை என்கிறார்கள்
என்ன செய்ய முடிந்தது என்னால்?
ஆச்சியின் சாவைத் தடுக்க முடியவில்லை.
அம்மாவுக்கு உதவாமல்
மாந்தோப்புகளில் விளையாடினேன்.
நதியைப் படைக்க முடியாத நான்
அதில் திளைத்து நீந்தினேன்.
என்ன படைப்பாளி நான்?
லூர்துநாதனின் குண்டடியை
அருகிலிருந்துதான் பார்த்தேன்.
ஸ்டெர்லைட் மரணங்களைத்
தொலைக்காட்சியில் கண்டேன்.
ஆனால் புறாக்களைப் பற்றிக்
கவிதை எழுதுகிறேன்.
ஒரு புல்லை, வானத்தை
மேகங்களை, நீரில் திளைக்கும் மீன்களை
எதையும் நான் படைத்ததில்லை.
பிறகென்ன படைப்பாளி நான்
என்னை ஏன் கொண்டாடுகிறீர்கள்?