Skip to content

தூங்காமல் தூங்கி

ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை

S. மாணிக்கவாசகம் எழுதிய தூங்காமல் தூங்கி - அறுவை சிகிச்சை அனுபவங்கள், மயக்க மருந்து பற்றிய தகவல்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகளை உள்ளடக்கிய புத்தகம்.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2009
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

மருத்துவர் மாணிக்கவாசகம், மதுரை மருத்துவக் கல்லூரியில் மயக்க இயல் துறையில் (Anaesthesiology) முது கலை பட்டம் பெற்றவர். முப்பது வருடங்களுக்கும் மேலாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி, ஓய்வு பெற்று, தற்போது மயக்க இயல் துறை ஆலோசகராக பல்வேறு மருத்துவமனைகளில் செயலாற்றி வருகிறார். அறுவை அரங்கம் ஒரு தனி உலகம். வலியும் பயமும் எழுதி ஒட்டிய முகங்களுடன் வரும் நோயாளிகளை, பல்வேறு மயக்கமருந்துகள் மூலம் தூக்கத்தில் ஆழ்த்தி, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மறுபடியும் தெளிந்த நிலைக்கு கொண்டு வருவது ஒரு தனிக்கலை. முப்பத்தைந்து வருட மயக்க மருத்துவ அனுபவங்கள் நினைவுச் சருகுகளாக அடுக்கு அடுக்காக குவிந்திருக்க, சருகுகளைக் கிளறிக் கிளறி எழுந்த எண்ணங்களின் எழுத்து வடிவமிது.