Skip to content

ஒரு பாட்டம் மழை

முனைவர் ம.பெ. சீனிவாசன் எழுதிய ஒரு பாட்டம் மழை - சங்க இலக்கியம், பண்பாடு, நாட்டுப்புறவியல் குறித்த நுண்ணிய கட்டுரைகளின் தொகுப்பு. புதிய விளக்கங்களுடன்!

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தொன்மைச் சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியங்கள் வரை நெடும்பயணம் செய்து தாம் கற்றுணர்ந்தவற்றை இக்கால வாசகர்களுக்கேற்பக் குறுங்கட்டுரைகளாக அளித்திருக்கிறார் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன். வ.ரா., சி.சு. செல்லப்பா, துமிலன் போன்றவர்கள் இவ்வடிவத்தினைக் கையாண்டிருந்தாலும் இலக்கியம், பண்பாடு, நாட்டுப்புறவியல் எனப் பல்துறைச் செய்திகளைக் 'கற்றோர் உளந்தொட்டுப் பேசும் முயற்சியில் முன்னோடியாகத் திகழ்கிறார் நம் ம.பெ.சீ. சேவகன் என்றால் தொண்டனல்லன், வீரன் என்று ஒரு புதிய விளக்கம் தருகிறார். 'கம்பனுக்கு ஒரு கைவிளக்கு' என்னும் கட்டுரை இந்நூலுக்கு முடிமணி. 'உரைகாரரை நினைந்துருகும் உ.வே.சா' என்னும் கட்டுரை உரையாசிரியர்கள் மீது ஐயர் கொண்டிருந்த தீராக் காதலுக்கு ஒரு சான்றாவணம்.

-முனைவர் ம.திருமலை
 முன்னாள் துணைவேந்தர். தமிழ்ப் பல்கலைக்கழகம்