Skip to content

கண்ணாடி குமிழ்கள்

வளவ. துரையன் எழுதிய கண்ணாடி குமிழ்கள் - வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தும் தத்துவ நூல். நீர்க்குமிழ்கள், வாழ்க்கை மற்றும் தத்துவ சிந்தனைகளைத் தூண்டும் புத்தகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Philosophy and Thought

Description

கம்பன் தன் இராமகாதையில் நிலையாமையைக் காட்ட நீர்க்குமிழ்களை உவமையாகப் பயன்படுத்தவில்லை. மாறாக நீர்க்கோலம் பயன்படுத்துகிறான். எனும் சொற்றொடரைப்
"நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்து விட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்."

என்பது கும்பகருணன் வீடணனிடம் சொல்லும் கூற்று. நீர்க்கோலமாகிய இந்த நிலையற்ற வாழ்வை விரும்பமாட்டேண் என்கிறான் கும்பகருணன். நீர்க் கோலம் என்பது நீரில் இட்ட கோலம் என்றும் நீரால் போடப்பட்ட கோலம் என்றும் பொருள் தரும். மழைநீரில் நாம் காணும் குமிழ்களும் நிலையாமையைக் காட்டுகின்றன. கண்ணாடிக் குமிழ்கள் போலிருக்கும் அவை விரைவில் உடைந்து போகின்றன. இதை உணராத பலர் எல்லா ஆட்டமும் ஆடிப் பார்க்கின்றனர்.