காலசர்ப்பம்
சி.சங்கர நாராயணன் எழுதிய காலசர்ப்பம் - வாழ்க்கைச் சிக்கல்களையும், மனித உறவுகளின் வலிகளையும் நுணுகி ஆராயும் நாவல். காலம் மற்றும் விதியின் விளையாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது மனித வாழ்க்கை. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்ற விசாரம் இல்லாத மனிதர் அரிது. இந்நாவலின் மையப் பாத்திரங்கள், குறிப்பாகப் பெண்கள் அத்தகையச்சூழலுக்கு ஆட்பட்டு விசும்புகின்றனர். எனினும் காலம் எனும் பாம்பின் வாயில் சிக்கிய நுணலைப்போல் ஏக்நாத்தும், அங்கிதாவும் புறத்தால் பெரும் சேதமடைகின்றனர். காலைச் சுற்றி கழுத்தை நெருக்கும் இன்னல்களைக்கண்டு, மனம் வாடி ஆண்கள் சோர்ந்துவிட அவர்களிலிருந்து மாறுபட்டு நிற்கிறான் ஏக்நாத். பெண் பாத்திரங்கள் அனைவருமே ஏதோ ஒரு கணத்தில் அசாத்திய சக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். அவை, கடைசி அத்தியாயத்தில் பரிபூரணத்தை எட்டுவதால், கால சர்ப்பத்தின் மாய வசீகரம் வாசகர்களையும் தீண்டி விடுகிறது.