Skip to content

தேவாரம்: ஒரு புதிய பார்வை

சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய தேவாரம்: ஒரு புதிய பார்வை - தேவாரப் பாடல்களின் வரலாற்றுப் பொருள் முதல்வாதப் புரிதல் மற்றும் பக்தி இலக்கியங்களின் முக்கியத்துவத்தை அறிய ஒரு புத்தகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 168
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தேவாரப் பாடல்களை ஏதோ கோயில்களில் கருவறையில் அர்ச்சகர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லிய பின்னர், கருவறைக்கு வெளியே, அர்த்த மண்டபத்தைத் தாண்டி கோயிலில் ஒதுக்கப்பட்ட ஓதுவார்கள், ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று பக்தர்கள் எல்லாம் ‘சுவாமி தரிசனம்’ முடிந்து நகரும் நேரத்தில் பாடப்படுபவை என்று நினைப்பது வரலாற்றைப் பார்க்க மறுக்கும் பிழையாகும். பக்தி இலக்கியங்கள் அக்காலக் கண்ணாடியாகும். எனவே பக்தி இலக்கியங்களை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்.