பாரதியின் காளி
ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் எழுதிய பாரதியின் காளி - பாரதியின் தேசபக்தி, காளி தத்துவம் மற்றும் நவசக்தி மார்க்கம் குறித்த ஆழமான ஆய்வு நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
மகாகவி பாரதியின் கருத்துநிலை வளர்ச்சியும் சுதேசியத்தின் வீறுநிலை வளர்ச்சியும் சமகாலத்தில் இயங்கியவை.
விவேகானந்தர், நிவேதிதா, அரவிந்தர் ஆகியோர் வழிநின்று பாரதியார் கண்டெடுத்த மார்க்கம் நவசக்தி மார்க்கம். அது எதிர்கால இந்தியாவிற்குப் பாரதி அளித்த கொடைகளில் ஒன்று. பாரதியின் கருத்தும், காளி என்ற தத்துவமும் ஒன்றிற்கொன்று பின்னிப் பிணைந்து தழைத்த செம்மையை இந்த நூல் துல்லியமாகப் படம் பிடிக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கனின் மற்றுமொரு நூலான ‘வேதம் புதுமை செய்த பாரதி’யும் இந்நூலும் பாரதியியலில் மதிப்புமிக்க ஆய்வு நூல்கள். கருத்துகளின் ஆழமும் தெளிவும் முடிவுகளின் கூர்மையும் நம்மை பரவசப்படுத்துகின்றன.