Skip to content

அந்தர மனிதர்கள்

வெ. நீலகண்டன் எழுதிய அந்தர மனிதர்கள் - மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும், சமூகப் போராட்டங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல். வாழ்க்கை பற்றிய புதிய புரிதலைப் பெற வாசியுங்கள்.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 112
Year 2017
Format Paperback
Tags Life and Society

Description

மனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறியா மனிதனின் பிணத்தைத் தள்ளுவண்டியில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளிக்கொண்டு வருவதும், ஆனந்தி, முகம் தெரியாத யாரோ ஒரு மனிதனின் விந்தணுவை தன் கருப்பையில் சுமப்பதும் பசியை விரட்டுவதற்கான நெடும் போராட்டத்தின் சிறுபகுதிதான்.

பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை தங்கள் வாழ்க்கைப்பாடாகக் கொண்டவர்கள்... எல்லோருமே நம் பார்வையில் வாழ்பவர்கள் தான். தினமும் இவர்களை கடந்து தான் நாம் நடக்கிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்க்கையிலும் இவர்களின் பங்களிப்புகள் இருக்கின்றன.

இவர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில காட்சிகளை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கடத்தும். இந்த நூலை வாசித்து முடிக்கும்போது வாழ்க்கை பற்றிய உங்கள் கற்பிதங்கள் மாறவும் செய்யலாம்!