தூவானம்
ஆ . மாதவன் எழுதிய தூவானம் - கிராமிய வாழ்க்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை அழகாகச் சித்தரிக்கும் ஒரு நாவல். இது ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
தூவானம், நாவல் வழியில் புதிய உத்தியென்று வரையறுத்துக்கொண்டு, எழுதிய நாவல். சும்மா வர்ணனைகள், அழகு விஸ்தாரங்கள், திருப்பங்கள், திடீர்முடிவுகள் என்றெல்லாமான நுணுக்கங்களை விட்டுவிட வேண்டுமெனவும் எண்ணி வேணு, நாயகம், சம்வாதங்களை சமத்காரமான அத்தியாயங்களில் அடுக்கினேன். இருந்தாலும், பூத்தொடுக்க நார் வேண்டுமென்பது போல எனக்கு நேரடித் தொடர்பு கொண்ட நாயகம் என்ற கற்பனைப் பெயர்க்காரருக்கு & ஒரு அழகிய மனைவி, கிராமத்துப் பண்ணை குடும்பம், பாட்டுக்கள் என்றெல்லாம் ஜிகினாக்களை இழைக்கலானேன்...
கடைசியில் என்னவாயிற்றென்றால், விட்ட பாதையிலேயே தொட்டுவந்து நின்றேன் என்னை அறியாமல். ஆமாம், பழக்க தோஷம்! என்ன இருந்தாலும் சிருஷ்டி என்ற முறையில், தூவானம் எனக்கு, மிகவும் திருப்தி தருவதாகவே வடிவம் கொண்டது.
- ஆ. மாதவன்