Skip to content

ஒருநாள்

க. நா. சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடு

க. நா. சு. எழுதிய ஒருநாள் - சாத்தனூர் கிராமத்தின் மனிதர்கள், வாழ்க்கை மற்றும் நிரந்தரமான உண்மைகளைத் தேடும் ஒரு சிறந்த நாவல். இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 192
Format Paperback
Tags Life and Society

Description

ஆரம்ப முதலே என் நாவல்களில் பலருக்கும் பிடித்த நாவலாக 'ஒருநாள்' அமைந்ததை என்னால் உணர முடிந்தது. சாத்தனூர் என்ற கிராமமும் அதன் மக்களும் என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு விரிவாக உருவாக்கினேன். இந்த நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு வேகம் இருந்தது. வேகம் கெட வேண்டும் என்கிற நினைப்புள்ள எனக்குக்கூட இந்த வேகம் பிடித்ததாக இருந்தது. நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன். வாசகர்களில் இந்த தலைமுறையைச் சேர்ந்த சிலரும் அப்படியே எண்ணுவார்கள் என்று நம்புகிறேன்.

- க. நா. சு.