Skip to content

மீன்கள்

தெளிவத்தை ஜோசப் எழுதிய மீன்கள் - மலையகத் தமிழர்களின் வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் கதைகளை ஆவணப்படுத்தும் சிறந்த படைப்பு.

Category Short Story
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 112
Year 2013
Format Paperback
Tags Life and Society

Description

இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது 'மீன்கள்'. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை.இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப் பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே பார்க்கிறேன். அவர்கள்தான் கடைசியாகச் சுரண்டப்பட்டவர்கள். ஒடுக்கப் பட்டவர்களின் கடைசிநிலையில் இருப்பவர்கள்.பலகோணங்களில் திறக்கும் ஒன்பது முக்கியமான கதைகளின் தொகுதி இது. நம் மண்ணிலிருந்து உதிர்ந்து சென்ற நம் ரத்தங்கள் எப்படி வாழ்ந்தனர், எப்படிப் போராடினர், எப்படி எழுந்தனர் என்பதற்கான ஆவணம். ஆகவே இது நமது வரலாறு