மரி என்கிற ஆட்டுக்குட்டி
பிரபஞ்சன் எழுதிய மரி என்கிற ஆட்டுக்குட்டி - அன்புக்காக ஏங்கும் ஒரு குழந்தையின் மனதை உருக்கும் கதை. பெற்றோரின் கவனமின்மை, தனிமை போன்ற உணர்வுகளைப் பற்றி பேசுகிறது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 208 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
மரியை எனக்குத் தெரியும். அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள். வசதியான குடும்பம். தெருவில் மூன்று கார்கள் நின்றன. நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில், அம்மா இல்லை. அதாவது குழந்தையிடம் இல்லை. அப்பா, பணம் பண்ணிக் கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள். அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள்.
குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம்.
- பிரபஞ்சன்
