விடிவதற்குள் வா!
சுஜாதா எழுதிய விடிவதற்குள் வா! - பரபரப்பான மர்ம நாவல், ஊர் திரும்பும் இளைஞனின் மனைவி காணாமல் போனது, கலவரத்தின் பின்னணியில் நடக்கும் துப்பறியும் கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 168 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
விடிவதற்குள் வா' என்ற நாவல் முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்தது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊருக்குள் புகைந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது. தலைகள் உருளுகின்றன. உடல்கள் சரிகின்றன. பதைபதைக்க வைக்கும் ஒரு மரண சாகசம் ஆரம்பமாகிறது.