Skip to content

உலோகம்

ஈழப்போர் பின்னணியில் ஒரு திகைப்பூட்டும் திரில்லர்!

ஜெயமோகன் எழுதிய உலோகம் - ஈழ அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு திரில்லர் நாவல். துரோகம் மற்றும் சாகசங்கள் நிறைந்த கதை, வாசகர்களைக் கவரும் அனுபவத்தைத் தரும்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 216
Year 2015
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.