திப்பு சுல்தான் (ப்ராடிஜி தமிழ்)
மருதன் எழுதிய திப்பு சுல்தான் (ப்ராடிஜி தமிழ்) - திப்பு சுல்தானின் வீரத்தையும், விடுதலைப் போராட்ட வரலாற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு சிறந்த வரலாற்றுப் புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு திப்பு சுல்தானிடமிருந்துதான் தொடங்குகிறது. தன் இறுதி மூச்சு உள்ளவரை ஆங்கிலேயர்களை மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடிய மாவீரனின் கதை இது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வர்த்தகம் செய்ய மட்டும் வரவில்லை, ஒட்டுமொத்த தேசத்தையும் அடிமைப்படுத்தத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை முதன் முதலில் புரிந்து கொண்டு எதிர்க்க ஆரம்பித்தவர் மாவீரன் திப்பு சுல்தான்.
துரோகம், சூழ்ச்சி, சதி எதுவும் பலிக்கவில்லை திப்புவிடம். தன் இறுதி மூச்சு உள்ளவரை, ஆங்கிலேயர்களின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டியாகத் திகழ்ந்திருக்கிறார் அவர்.
ஒரு சிறந்த போர் வீரராக இருந்த அதே சமயம், மக்கள் நலனுக்காகப் போராடும் மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் இருந்தார் திப்பு.
திப்பு சுல்தானின் சரித்திரம், விடாமுயற்சியையும் வீரத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருசேரக் கற்றுக்கொடுக்கிறது.