Skip to content

திருமங்கையாழ்வார் மடல்கள்

நாயகி பாவப் பாடல்கள்

முனைவர் ம.பெ. சீனிவாசன் எழுதிய திருமங்கையாழ்வார் மடல்கள் - வைணவத்தின் அழகையும், தமிழின் சிறப்பையும் அறிய உதவும் அரிய ஆய்வு நூல். மடல்கள் பற்றிய தகவல்களின் முழுமையான தொகுப்பு.

Category Poetry
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 144
Year 2024
Format Paperback
Tags Faith and Spirituality

Description

'மடல் குறித்த செய்திகள் அனைத்தையும் எஞ்சாது திரட்டி ஒரே நூலில் கொடுத்துள்ள உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கின்றது. இச்சிறிய நூலில் அரிய பல செய்திகளைச் செறிவாக அமைத்திருத்தல் ஆராய்ச்சியாளர் பிறருக்கும் வழிகாட்டியாக அமையும்.'

– பேராசிரியர் கோ. சங்கரராசுலு

'முனைவர் ம.பெ.சீனிவாசன் அரிதின் முயன்று உருவாக்கியுள்ள இந்நூலினைப் பயிலும் பேறு பெற்றேன். இந்நூல் சிந்தனை நெறியில் செல்வது வாசகர்களின் தவப்பயன். வெற்றுச் சொற்களோ வேற்றுச் சொற்களோ கலவாமல் ஆய்வுக்குப் படிச்சந்தமாக அமைந்திருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு.'

–‘கம்பராமன்’ எஸ்.கே. இராமராசன்

ம.பெ.சீயின் ‘திருமங்கையாழ்வார் மடல்கள்’ வைணவத்தின் வண்ணமும் தமிழின் அருமையும் கலந்து தொடுத்த சரம்.'

– பிரேமா நந்தகுமார்