Skip to content

சீனப் புரட்சி (ப்ராடிஜி தமிழ்)

மருதன் எழுதிய சீனப் புரட்சி (ப்ராடிஜி தமிழ்) - சீனாவின் வரலாறு, புரட்சி மற்றும் மாவோவின் எழுச்சி குறித்து அறிய சிறந்த புத்தகம். சமூக மாற்றத்திற்கான ஒரு உத்வேகம்.

Category History
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2008
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நான்காயிரம் ஆண்டுகளாக அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். சன் யாட் ஸென்னுக்கு ஒரு கனவு இருந்தது. மன்னர் ஆட்சி ஒழியவேண்டும். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும்.

சீனா ஒரு குடியரசாக மலர வேண்டும். சன் யாட் ஸென் கண்ட கனவு மாவோவால் மெய்ப்பிக்கப்பட்டது. "என் பின்னால் வா" என்று அந்தத் தேசத்தை தனக்குப் பின்னால் அணிதிரட்டிப் போராடினார் மாவோ. மக்களை உந்துசக்தியாகக் கொண்டு மாவோ நிகழ்த்திக் காட்டிய சீனப் புரட்சி அத்தேசத்தின் வரலாறை மாற்றியமைத்தது.