Skip to content

ரமணர் (ப்ராடிஜி தமிழ்)

மதுரபாரதி எழுதிய ரமணர் (ப்ராடிஜி தமிழ்) - ரமணரின் வாழ்க்கை, ஆன்மீக போதனைகள் மற்றும் மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2007
Format Paperback
Tags Faith and Spirituality

Description

நான் யார்? இரண்டே இரண்டு வார்த்தைகளைக் கொண்ட மிகக் கடினமான கேள்வி இது. வெகு சிலரால் மட்டுமே இந்தக் கேள்விக்கு விடை காண முடிந்திருக்கிறது. ரமணர் அவர்களுள் முதன்மையானவர்.

ரமணர் தனக்கென்று சில கடமைகளை வகுத்துக்கொண்டார். இறைவன் எனக்கு அருளிய ஒளியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

ஆன்மிகத்தை அன்பில் குழைத்து அனைவருக்கும் விநியோகிப்பேன். புனிதமான மனித நேயத்தை எல்லோருடைய இதயத்திலும் விதைப்பேன்.

இறைவனிடம் நெருங்குவதை நோக்கமாகக் கொள்ளாமல் மக்களிடம் நெருங்கி தன்னைக் கரைத்துக்கொண்டவர் ரமணர்.

மழை போல் பொழிந்து அனைவரையும் பேரானந்தத்தில் மூழ்க வைத்தவ ரமணரின் தித்திக்கும் திவ்ய சரிதம்.