Skip to content

ரஜினியின் பன்ச் தந்திரம்

பி. சி. பாலசுப்பிரமணியன் எழுதிய ரஜினியின் பன்ச் தந்திரம் - ரஜினி வசனங்களின் ஊக்கம், தலைமைப் பண்பு மற்றும் வாழ்க்கைத் தத்துவங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 133
Year 2010
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

வாழ்வும் தொழிலும் வளம் பெற ரஜினியின் 30 முத்திரை வசனங்கள் சாதாரணக் கூலித் தொழிலாளியானாலும் சரி... பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியானாலும் சரி... படிப்பறிவு இல்லாதவரானாலும் சரி... முதுநிலைப் பட்டம் பெற்றவரானாலும் சரி... ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கைக் கேட்டதும் கண்ணில் சின்ன மின்னலோ புன்சிரிப்போ ஏற்படும். ரஜினியால் ஒரு முறை சொல்லப்-படும் வசனங்கள் பலரால் நூற்றுக்கணக்கான தடவை, தங்கள் கருத்தை சர்வ சாதாரணமாக அதே சமயம் வலிமையுடன் சொல்லப் பயன்படுகின்றன.

நிர்வாகம், உத்வேகம், தலைமைப் பண்பு, அர்ப்பண உணர்வு, தொலைநோக்கு, சமூகக் கடமை, நேர நிர்வாகம், செயல் திறமை, கவுரவம், பகிர்ந்து கொடுக்கும் குணம், சுய நலமின்மை என பல மதிப்பீடுகளை ரஜினியின் பன்ச் டயலாக்குகள் வழியாக நூலின் ஆசிரியர்கள், சுவாரசியமான நடையில் விளக்கியுள்ளார்கள்.நம் காலத்தில் ஒளி வீசும்?சூப்பர் ஸ்டாருக்கு எளிய காணிக்கையே இந்த நூல்.

பி.சி.பாலசுப்ரமணியன். மேட்ரிக்ஸ் பிஸினஸ் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடடின் நிறுவனர்இயக்குநர்களில் ஒருவர். எந்தவொரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் மிகப் பெரிய சொத்து, அதில் பணிபுரிபவர்கள்தான் என்ற நம்பிக்கை கொண்டவர். பணியாளர்களின் இயல்பைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து அதிகபட்ச திறமை வெளிப்பட உத்வேகம் ஊட்டக்கூடியவர். ஒவ்வொரு மனிதருக்கும் தொழில் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை இரண்டும் இரு கண் போன்றது என்ற புரிதலுடன் செயல்படுபவர்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி மனிதவள மேம்பாட்டுத்துறையில் 33 வருட அனுபவம் கொண்டவர். சென்னையில் இருந்து இயங்கும் டேலண்ட் மேக்ஸிமஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர். நிறுவன வளர்ச்சி தொடர்பாக ஆலோசனையும் பயிற்சியும் வழங்கிவருபவர். சுய விழிப்பு உணர்வின் மூலம் நிறுவனச் செயல்பாடுகள், கூட்டு முயற்சி, தலைமைப் பண்புகளை மேம்படுத்துதல், சுய ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றை வளர்த்தெடுப்பதில் நீண்ட கால அனுபவம் பெற்றவர்.