கலைஞர்: சமரசமில்லா சமத்துவப் போராளி
ரவிக்குமார் எழுதிய கலைஞர்: சமரசமில்லா சமத்துவப் போராளி - கலைஞரின் சமூகப் பங்களிப்புகள், அரசியல் போராட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை இந்நூல் விவரிக்கிறது.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
கலைஞரின் சமூக, அரசியல், பண்பாட்டுப் பங்களிப்புகளை ஆராயும் ரவிக்குமாரின் நூல், விரைவில் கிழக்கு வெளியீடாக வெளிவரவிருக்கிறது.
அடித்தட்டு மக்களுக்காகவும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காகவும் கலைஞர் ஆற்றிய நற்பணிகள் சிலவற்றை இந்நூலில் நினைவுகூர்கிறார் ரவிக்குமார். சட்ட மேலவைக்கான போராட்டம்; மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தொடர் போர்; மருத்துவக் காப்பீடு, நரிக்குறவர்களுக்கான நலவாரியம் போன்ற திட்டங்கள்; அகதிகளுக்கும் அயல்நாடுவாழ் தமிழர்களுக்குமான ஆதரவுக் கரம் என்று கலைஞரின் அரசியல் வாழ்வின் முக்கியமான சில அத்தியாயங்களை விவரிக்கிறார் ரவிக்குமார்.
தங்கம் தென்னரசு நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கிறார்.