இருட்கனி (செம்பதிப்பு)
வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்
ஜெயமோகன் எழுதிய இருட்கனி (செம்பதிப்பு) - மகாபாரதப் போரின் இறுதியைச் சொல்லும் நாவல். கர்ணனின் கதை, மானுட வாழ்வின் உச்சம், வெண்முரசு வரிசையில் ஒரு முக்கியமான புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 688 |
| Year | 2021 |
| Format | Hardcover |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். வெண்முரசின் இருபத்தொன்றாவது நாவலான இது மகாபாரதப்போரின் இறுதியைச் சொல்லத் தொடங்குகிறது. கருமை இங்கே இருளெனத் துளித்துவிட்டிருக்கிறது. குருஷேத்ரக் கொலைக்களத்தில் குருதியெனும் அந்தியில் கதிரவன் மைந்தன் மறையும் காட்சியுடன் நிறைவடையும் இந்நாவல் மானுடவாழ்க்கையின் உச்சகணங்கள் சிலவற்றைச் சொல்கிறது. பிறக்கும் கணம் முதல் அடையாளங்களை எடையெனச் சுமந்த ஒரு மாவீரன் தன்னை அவை ஒவ்வொன்றிலிருந்தும் விடுவித்துக்கொண்டு தன்னைத் தானே வரையறை செய்து களத்தில் ஓங்கி நின்றிருக்கும் கதை.
இருட்கனி – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்தொன்றாவது நாவல்.
இதில் வண்ணப் புகைப்படங்கள் கிடையாது.