Skip to content

வடசென்னைக்காரி (காலச்சுவடு)

ஷாலின் மரிய லாரன்ஸ் எழுதிய வடசென்னைக்காரி (காலச்சுவடு) - வடசென்னையின் உண்மை முகம், மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை அழகாகச் சித்தரிக்கிறது. சமூக உறவுகள் பற்றிய நுண்ணறிவு நூல்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

குற்றங்கள், வறுமை, அழுக்கு, வசதியின்மை என எதிர்மறை பிம்பங்களால் அடையாளப்படுத்தப்படும் வடசென்னையின் அசல் முகத்தைக் காட்டுகிறார் ஷாலின் மரிய லாரன்ஸ். வடசென்னையின் அசல் முகம், உழைப்பு, போராட்டம், உணவு, வியாபாரம், கலாரசனை, கொண்டாட்டம், நட்பு, சமூக உறவுகள் எனப் பன்முகத்தன்மை கொண்டது. வன்முறையும் வறுமையும் அதன் இயல்புகள் அல்ல; ஆளும் வர்க்கத்தினரின் பாரபட்சத்தின் விளைவுகள் என்பதையும், சென்னையின் ஆதாரமான இயல்புகள் பலவும் வடசென்னையில் வேர்கொண்டவை என்பதையும் இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது. வடசென்னையின் அலட்டிக்கொள்ளாத கொண்டாட்ட இயல்பு ஷாலினின் சரளமான மொழியில் பிரதிபலித்து வாசிப்புக்குச் சுவை கூட்டுகிறது.