Skip to content

வாஸவேச்வரம்

கிருத்திகா எழுதிய வாஸவேச்வரம் - தமிழக கிராம வாழ்வின் யதார்த்தத்தையும், கனவுகளின் பின்னணியையும் நுட்பமாகச் சொல்லும் சிறந்த நாவல். நவீன புனைவு இலக்கியம்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 184
Year 2007
Format Paperback
Tags Life and Society

Description

நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல் பெண் படைப்பாளி கிருத்திகா. இவரது நான்காவது நாவல் ‘வாஸவேச்வரம்.’

கதாகாலட்சேபத்தில் தொடங்கி, கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக் கிராமத்தை கதாபாத்திரங்களை மையமாகக்கொண்டு, கனவுகளாலும் கதைகளாலும் புனையப்பட்டுள்ள வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரை நீக்கி, அவற்றின் யதார்த்தத்தை உணர்த்துகிறது.

எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் கடந்தபின்னும் புத்துணர்ச்சியுடன் படிக்க முடிவதே இந்த நாவலின் சிறப்பு.