தனித்தலையும் செம்போத்து
செந்தி எழுதிய தனித்தலையும் செம்போத்து - நினைவுகள், ஏமாற்றங்கள் மற்றும் இடப்பெயர்ச்சிகளைப் பற்றிய கவிதைகளின் தொகுப்பு. மனதின் தத்தளிப்பை உணர்த்தும் சிறந்த படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
நினைவுகளின் விரட்டலுக்கும் எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்துக்கும் இடையில் நிகழும் தர்க்க அல்லது அதர்க்கப் பாய்ச்சல் செந்தியின் கவிதைகள். நேற்றிலிருந்து நாளையையும் நாளையிலிருந்து நேற்றையும் எடை போட்டுப் பார்க்கும் இன்றைய மனம் அவருடையது. இடப்பெயர்ச்சிகளின் தத்தளிப்பு அவருடைய மனநிலை. ‘எங்குதான் இருக்கிறாய்?’ என்று கேட்டால் எங்கேயும் எப்போதும் இருப்பதில்லை என்று விடை சொல்லும் எங்கும் எப்போதும் இருக்கும் கவிதையின் குரல் செந்திக்கு வாய்த்திருக்கிறது. அதன் புற அடையாளம் இந்தத் தொகுப்பு.