ஒரு சூத்திரனின் கதை
ஏ. என். சட்டநாதன் எழுதிய ஒரு சூத்திரனின் கதை - சாதிப் பாகுபாடு நிறைந்த காலத்தில் கல்விக்காகப் போராடிய ஒருவரின் சுயசரிதை. சமூக நீதி, சுய முன்னேற்றம் குறித்த ஒரு முக்கியமான புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 272 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
“நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார்” புத்தகத்தின் இடையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ஏ.என். சட்டநாதன். உயர் சாதியினர்தான் படித்தவர்கள் என்ற சூழல் நிலவிய இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சட்டநாதன், கல்வியைப் பெறுவதிலும் தகுந்த வேலையை அடைவதிலும் நடத்திய போராட்டமே இந்த நூல். முழுமையடையாத இந்தச் சுயசரிதையை சட்டநாதன் விவரித்துச் செல்லும்போது, எந்தவொரு வறிய, பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த குழந்தையின் போராட்டமாகவும் புத்தகம் விரிகிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலும் சிவில் சர்வீஸ் உயரதிகாரியாக இருந்த ஏ.என். சட்டநாதன், தமிழ் நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவராகவும் விளங்கினார்.