‘ஓ’ஹோ பக்கங்கள்
ஞாநி எழுதிய ‘ஓ’ஹோ பக்கங்கள் - சமகால தமிழ் சமூகம், இதழியல் மற்றும் சமூக சிந்தனைகள் குறித்த ஆழமான, சுதந்திரமான கருத்துக்களின் தொகுப்பு.
| Category | Article |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 248 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
‘ஓ’ என்ற தமிழ் வியப்பொலிக்கு சமூகச் சிந்தனையளவிலும் இதழியலிலும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் ஞாநி. தமிழில் இன்று தொடர்ந்து வெளியாகும் பத்திரிகைப் பத்தி அவருடைய ‘ஓ’ பக்கங்கள் மட்டுமே. மூன்று பிரபல வார இதழ்களிலும் எழுதப்பட்ட, எழுதப்படும் பத்தி என்பது அதன் வாசக ஏற்பை மட்டுமல்ல; அதன் சமூக அக்கறையையும் முதன்மைப்படுத்துகிறது.
சமகாலத் தமிழ் வாழ்வைப் பாதிக்கும் அனைத்துத் துறைகளையும் குறித்துக் கருத்துரைப்பவரும் அவை பற்றித் தொடர்ந்து உரையாடல் நடத்துபவரும் ஞாநி மட்டுமே. ஒரு நிகழ்வைப் பற்றிய பொது அபிப்பிராயத்தை மீறிய சுதந்திரமான சிந்தனை, சமரசமற்ற நிலைப்பாடு, ஆதாரப்பூர்வமான தரவுகள், மத (சாதி, இன) சார்பற்ற பார்வை, கறாரான விமர்சனம், நேரடியான எளிய அணுகுமுறை இவையே ‘ஓ’ பக்கங்களின் குணங்கள்.