Skip to content

நிழல்முற்றத்து நினைவுகள் (காலச்சுவடு பதிப்பகம்)

பெருமாள் முருகன் எழுதிய நிழல்முற்றத்து நினைவுகள் - சுயவரலாற்று எழுத்தில் ஒரு புதிய பார்வை! உறவுகள், வரலாறு மற்றும் சுயத்தை தேடும் பயணத்தை இந்நூல் வழங்குகிறது.

Category Autobiography
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 183
Year 2018
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

சுயவரலாற்றுத் தன்மை கொண்ட எழுத்தில் சுயத்தைக் குறைத்து அதை வரலாற்றில் வைத்துப் பேசுவது எப்படி என்பதற்கு பொருமாள்முருகனின் இந்த நூல் முன் உதாரணமாகும். இயல்பிலேயே அவர் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பார்வையைப் பெற்றிருப்பதால் சுயமையின்மை சுலபமாக அவருக்குக் கைவந்திருக்கிறது. இந்த நூல் முழுவதும் அவர் இருக்கிறார். ஆனல் அவர் கவனப்படுத்திய எண்ணற்ற விஷயங்களில் கலந்து பரவியிருக்கிறார் என்பதுடன் அவற்றால் உருவாக்கப்பட்ட சுயத்தைக் கொண்டவராக இருக்கிறார். சுயவரலாற்று எழுத்துக்களை மேற்கொள்ளும் யாருக்கும் பெருமாள்முருகனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.