எந்தையும் தாயும் (காலச்சுவடு)
தினகரி சொக்கலிங்கம் எழுதிய எந்தையும் தாயும் - புதுமைப்பித்தனின் மகள் கமலா விருத்தாசலம் வளர்ப்பு அனுபவத்தையும், தந்தை நினைவுகளையும் நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறது.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரி. அவர் பிறந்த இரண்டு ஆண்டுகளில் புதுமைப்பித்தன் காலமாகி விட்டார். இதிலும் பெரும்பகுதிக் காலம் அவர் சென்னையிலும் பூனாவிலும் திரைக்கதை எழுதுவதில் செலவிடும் சூழல். காச நோயால் அவர் காலமானபொழுது தினகரிக்கு விவரம் தெரியாத வயது. யாருடைய ஆதரவுமின்றி கமலா விருத்தாசலம் தினகரியை வளர்த்து ஆளாக்கினார். இந்த அனுபவங்களைக் கண்ணீரில் தோய்த்து நெக்குருக வடித்திருக்கிறார் தினகரி சொக்கலிங்கம். புதுமைப்பித்தன் அன்பர்கள் தவிர்க்க முடியாத நூல் இது.