Skip to content

பம்பாய் சைக்கிள்

ரவி அருணாசலம் எழுதிய பம்பாய் சைக்கிள் - ஈழத்து மக்களின் வலி, இந்திய அமைதிப்படையின் பங்கு, வரலாற்றுப் பின்னணியை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 344
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்திய அமைதிகாக்கும் படை  இலங்கையில் புகுந்த நாளிலிருந்து  வெளியேறிய நாள் வரை, ஈழத்தின் மண்ணுக்கும் மக்களுக்கும் நிகழ்ந்ததைச் சித்திரிக்கும் படைப்பு இது. இந்தியாவை நட்பு நாடாகவே கருதிவந்த ஈழத் தமிழர்களின் எண்ணம் இதன் பிறகு மாறியதாகவே பலரும் கருதுகிறார்கள். இந்திய அமைதிப்படை ஈழத்தில் தங்கியிருந்த காலத்தின் நிகழ்வுகளைச் சொல்லும் இந்த நாவல் அதனால் ஈழத் தமிழர் மனங்களிலும் வாழ்விலும் ஏற்பட்டுவிட்ட நிரந்தரமான மாற்றங்களை அடையாளம் காண முயல்கிறது. வரலாற்றுப் பதிவை கலாபூர்வமான கண்ணோட்டத்துடன் முன்வைக்கும் இரவி அருணாச்சலம் ஈழத் தமிழரின் வாழ்வையும் வரலாற்றையும் புனைவின் வழி ஆவணப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இது அவரது ஐந்தாவது நாவல்.