Skip to content

அசாதாரண மனிதன்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதிய அசாதாரண மனிதன் - புலம்பெயர் வாழ்க்கையின் துயரம், நகைச்சுவை நிறைந்த வித்தியாசமான சிறுகதைத் தொகுப்பு. தமிழகத்தில் புதிய வாசிப்பு அனுபவம்!

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 64
Year 2008
Format Paperback
Tags Life and Society

Description

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்துவரும் சச்சி தானந்தன் சுகிர்தராஜா எழுதிய இந்த எட்டுக் கதைகளும் 1980களின் நடுப்பகுதியில் ‘கணையாழி’யில் வெளிவந்தவை. ஏழு கதைகள் இங்கிலாந்தையும் ஒரு கதை இலங்கையையும் பின்புலமாகக்கொண்டவை. பெரும்பாலான கதை மாந்தர்களும் வேறு கலாசாரங்களைச் சார்ந்தவர்கள். அவ் வகையில் தமிழகச் சூழலில் வித்தியாசமான சிறுகதைகள் இவை.

இந்த எட்டுக் கதைகளும் அழகான புதுமையான தமிழில் எழுதப்பட்ட அயல்நாட்டுக் கதைகள். இவற்றின் போக்கும் முடிவும் துக்கம் கலந்த நகைச்சுவையோடு கூடியவை.