அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்
பழ. அதியமான் எழுதிய அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் - ஜார்ஜ் ஜோசப்பின் வாழ்க்கை, காங்கிரஸ் கொள்கைகள் மற்றும் ராஜாஜியுடன் அவர் உறவு குறித்த நம்பகமான தகவல்களைப் பெறுங்கள்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
நம்பகமான தகவல்கள் கொண்ட ஜார்ஜ் ஜோசப் குறித்த முதல் தமிழ் நூல்.
இருவர் (ஜார்ஜ் ஜோசப், ராஜாஜி) கலந்து யோசித்ததே, பெரும்பாலும் நமது ஹிந்துஸ்தானத்தின் காங்கிரஸ் வேலைத்திட்டமாய் அமையப்பெற்றது என்றும் சொல்லுவதற்கு இடமுண்டு, சீரங்கக் கூட்டத்தில், ஆச்சாரியார் சொன்னதை மற்றவர்கள் எளிதிலே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், ஜோஸப்போ வாக்கியத்துக்கு வாக்கியம் வாதம், சண்டை, குஸ்தி போட்டார். எல்லாம் வாயால்தான். கடைசியில் சமாதானம். ஆச்சாரியாரின் தெள்ளறிவு ஜோஸப்பின் மேதையை ஒப்புக்கொண்டது. ஜோஸப்பின் கட்டுக்கடங்காத கருத்துகள், ஆச்சாரியாரின் தர்க்கப் பாதுகாப்புகளை வேண்டின. பொன் மலர் நாற்றமுடைத்துப்போல இருவரும் ஒன்றுசேர்ந்து, தமிழ்நாட்டில் பிரகாசத்துடன் ஜொலித்தார்கள்.
- வ. ரா.