Skip to content

அடியும் முடியும்

க. கைலாசபதி எழுதிய அடியும் முடியும் - அகலிகை கதை மற்றும் இலக்கிய மாற்றங்களை அலசும் ஒரு சிறந்த ஆய்வு நூல். கற்புநெறி, தமிழிலக்கியம் குறித்த புதிய பார்வை.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 264
Year 2017
Format Paperback
Tags Philosophy and Thought

Description

இறைவனின் அடியும் மூடியும் காண இயலாதென்பது நம்பிக்கை. இறைவன் படைத்த எதனையும் எல்லை காண இயலாதென்பது உட்பொருள். இடையறாமல் முயன்றால் எப்பொருளாயினும் எல்லை காணலாம் என்பது ஆராய்ச்சி.

‘காலத்தோடு கற்பனை கடந்த’ கடவுளை வாழ்த்தும்போது காலத்தின் சாயல் படியாத கற்பனை இல்லை. கடவுளும் காலத்தைக் கடக்கவில்லை.

ஆதிகவி வான்மீகி முதல் அண்மைக்காலப் புனைகதையாசிரியர் வரை அகலிகை கதையைத் தத்தம் காலத்தில் நின்று அணுகியுள்ளார். இக்கதைகளினூடே மாறிவரும் கற்புநெறியைக் காணமுடிகிறது. இவ்வாறெல்லாம் கோட்பாட்டுக் கண்கொண்டு கைலாசபதி தமிழிலக்கியத்தில் காணும் சில கருத்து மாற்றங்களை இந்நூலில் அலசி ஆராய்ந்துள்ளார்.