அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு
(பூலோகவியாஸன் 1905-1906)
சு.சந்திரா எழுதிய அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு - இதழியல், மொழி வளர்ச்சி மற்றும் சமூக பங்களிப்பை அறிய சிறந்த புத்தகம். ஆதி திராவிடர் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Magazine |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
ஐரோப்பியர் அச்சுப் பண்பாட்டை அறிமுகம் செய்த காலத்திலிருந்தே ஆதி திராவிடரின் அறிவு மரபும் இந்தத் துறைக்குப் பங்களித்துவருகிறது. இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள ‘பூலோகவியாஸன்’ அத்தகைய பங்களிப்புகளில் ஒன்று.
1905-06 ஆண்டுகளில் வெளியான இந்த இதழ், திருக்குறள், நீதிசாத்திரம், இலஞ்சம், சாதி, பெண்கள், தத்துவம், தானம், தேகம், தர்பார், உழவர், இசை, மதுவிலக்கு என அனைத்தையும் குறித்து உரையாடியது; றகர, ரகர பேத விளக்கத்தையும் இந்த இதழ் தொடர்ந்து வெளியிட்டுவந்தது.
தமிழ்ச் சமூகத்தில் அச்சுப் பண்பாடு, இதழியல், மொழி வளர்ச்சி ஆகியவற்றில் ஆதி திராவிடர்கள் ஆற்றியுள்ள காத்திரமான பங்களிப்புக்குச் சாட்சியாய் நிற்கிறது ‘பூலோகவியாஸன்’.