Skip to content

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (தொகுதி 3)

யவனிகா ஸ்ரீராம் எழுதிய யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (தொகுதி 3) - சமூகப் பிரச்சினைகள், மனித வாழ்வு, கவிதைகள் நிறைந்த தொகுப்பு. ஷங்கர் ராமசுப்பிரமணியன் பாராட்டு!

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Society and Economy

Description

முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்நியமாக்கினாலும் ஓரளவு தன்னிறைவுக்கும் வாழ்வாதாரத்துக்குமான வழிகளையாவது விட்டுவைத்திருந்தன. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்கள் ஈடுபடுவதற்கு எந்திரங்கள் கூடப் பறிக்கப்பட்டு விட்டன. பூர்வ நிலங்களிலிருந்தும் பிடுங்கி எறியப்பட்ட மக்கள் உலக வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் காலம் இது. அந்த நிலைமைகளை கவிஞன் யவனிகா ஸ்ரீராமைப் போலத் தமிழில் கலையழகுடனும் தீர்க்க தரிசனத்துடனும் உரைத்த ஒரு மார்க்சியக் கவிஞன் யாருமில்லை.

- ஷங்கர் ராமசுப்பிரமணியன்