திருக்குறள் நாமே படிக்கலாம் (1-அறத்துப்பால்)
திருக்குறள் நாமே படிக்கலாம் (1-அறத்துப்பால்) - திருக்குறளை எளிதாகப் புரிந்துகொள்ளவும், சொந்தமாகப் படிக்கவும் பயிற்சி அளிக்கும் கையேடு. வள்ளுவரின் பொன்மொழிகளை உணர்ந்து தெளிவு பெறுங்கள்.
| Category | Manual |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Education and Learning |
Description
பெரும்பாலானோர் திருக்குறளை உரையின் துணையோடுதான் படிக்கிறார்கள். ஆனால், பலரும் நினைப்பதுபோல் அது அவ்வளவு கடினமான நூல் இல்லை. கொஞ்சம் முயன்றால் நாமே திருக்குறள் படிக்கலாம், தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அதற்குத் தேவை, முறையான பயிற்சி. அவ்வளவுதான்!
திருக்குறளை நாமே சொந்தமாகப் படித்துப் புரிந்துகொள்வதற்குத் தேவையான பயிற்சியை இந்த நூல் வழங்குகிறது. ஒவ்வொரு குறளையும் சரியாகப் பிரித்துக் காட்டி, அந்தச் சொற்களை எப்படிக் கோத்துப் படிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து, எளிதில் விளங்காத அரிய சொற்களுக்கான பொருளை எடுத்துச்சொல்லி, நிறைவாக அந்தக் குறளுக்கான பொருளையும் விளக்கி உதவுகிற கையேடு இது.
பொறுமையாகப் படிக்கத் தொடங்குங்கள், 100 பக்கங்களைத் தாண்டுவதற்குள் நீங்களே குறள்களுக்கான பொருள்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிடுவீர்கள், வள்ளுவரை அவருடைய சொற்களிலேயே நேரடியாக உணர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்!