புள்ளி வண்டுகள் பிரசவிக்காத காலம்
ப. காளிமுத்து எழுதிய புள்ளி வண்டுகள் பிரசவிக்காத காலம் - கவிதைகளில் பிரதேச அழகியலும், தனித்துவமான நடையும் விரவியுள்ள தொகுப்பு. வாழ்வின் தத்துவத்தை உணரச் செய்யும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 106 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
இன்மையின் அதீத உருவழிதல், விளிம்பு வாழ்வின் சிதிலங்களில் இருந்து தன் மொழிக்கு சாரங்களைப் பெற்றுக் கொள்பவராக, பிரதேச அழகியல் மிளிரும் சொற்களைத் தனது கவிதைகளில் மிகச் சாவகாசமாகக் கையாளும் ஒருவராக இந்தத் தொகுப்பின் வழி தனது புதிய அடையாளங்களுடன் வெளிப்பட்டிருக்கிறார் கவிஞர் காளிமுத்து
மொழிக்குள் விரும்பி ஒளிந்து கொள்ளும் தன்மை அதன் அடர்வில் புதிர்த்தன்மையை ஏற்றி விடுகிறது. வாழ்வில் வெதுவெதுப்பான தண்ணீரை, ஒரு முன்மதிய நேரத்து நிழலை உவமையாக்குவது மாதிரி அதிகப் பிரயத்தனங்களற்ற ஒரு தனி நடையை இவரது கவிதைகளில் காண முடிகிறது.
- நேசமித்ரன்