புதுவையில் ஒரு மழைக்காலம்
அய்யனார் விஸ்வநாத் எழுதிய புதுவையில் ஒரு மழைக்காலம் - மறக்க முடியாத காதல் அனுபவம், இளமை நினைவுகள் மற்றும் புதுச்சேரியின் அழகிய மழைக்காலத்தை இந்நாவல் வழங்குகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
வாழ்வு தொடர்ந்து குரூரங்களையே நம் மீது திணித்துக் கொண்டிருக்கும்போது நாம் ஏன் அதற்குக் காதலைத் திரும்பப் பரிசளிக்கக் கூடாது என எண்ணியதன் விளைவுதான் இந்த நாவல்.
முதிரா இளமைதான் நம்முடைய வாழ்வில் மிகச் சிறந்த பகுதியாக இருக்க முடியும். சுதந்திர மனமும், இலக்கற்ற நாட்களும் நிறைந்திருக்கும் காலகட்டத்தில் கிடைக்கும் காதல் அனுபவம் மகத்தானது. மறுபடி நிகழவே முடியாத அற்புதம் நம் ஒவ்வொருவருக்குமான முதல் காதல் அனுபவம்தான். ஒரு மழைக்காலத்தில் துவங்கி இன்னொரு மழைக்காலத்தில் முடியும் இந்தச் சின்னஞ்சிறு நாவலில் திகட்டத் திகட்ட ஒரு காதல் அனுபவம் உங்களுக்குக் காத்திருக்கிறது.