பனி உருகுவதில்லை
அருண்மொழி நங்கை எழுதிய பனி உருகுவதில்லை - அழகான நினைவுகளும், நேர்த்தியான எழுத்து நடையும் கொண்ட கட்டுரைத் தொகுப்பு. இளமை கால அனுபவங்கள் மற்றும் சமகால வாழ்க்கைச் சிந்தனைகள் இதில் உள்ளன.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
அருணா பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது. புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது.
- அ. முத்துலிங்கம்
இளமை நினைவுகளை எழுத முற்படும்போது, நினைவேக்கத்தின் தழுதழுப்பும் இழந்தவை பற்றிய பொருமலும் தவிர்க்கமுடியாமல் வெளிப்படும். அருண்மொழியின் கட்டுரைகளில் அது நடக்கவில்லை . துல்லியமான விபரங்களுடன், சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம். சமனமான, முதிர்ந்த நடை.
- யுவன் சந்திரசேகர்