மீயழகி
சி. சரவணகார்த்திகேயன் எழுதிய மீயழகி - பெண்களின் அழகையும், காதலையும் கொண்டாடும் கவிதை நூல். இந்த புத்தகம், பெண்மையை ரசிக்கும் அனுபவத்தை வழங்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. “பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…” என்ற அமர வரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளிய பிரயத்தனம் இது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிப்பதற்கும் அழகிய மலையாளத்தியை ரசிப்பதற்கும் வேறுபாடில்லை. இரண்டுமே இயற்கையின் கொடை! ஒரு கவிதையை, ஓர் இசையை, ஒரு நடனத்தை, ஓர் ஓவியத்தை, ஒரு சிற்பத்தை ரசிப்பது போல் பெண்ணை ரசிக்கிறார் - ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், அனு ஸிதாரா, ப்ரியங்கா மோகன் எனப் பெயர் மாறினாலும் ரசனை ஒன்றே! எந்தப் பெண்ணும் பொறாமை கொள்ளும் சொற்களால் ஆனது இந்தப் புத்தகம்!