Skip to content

மண் மக்கள் மன்னன்

கம்பராமாயணக் கவிகள்

சி. சரவணகார்த்திகேயன் எழுதிய மண் மக்கள் மன்னன் - கம்ப ராமாயணத்தின் எளிய நவீன விளக்கம்! மண், மக்கள், மன்னன் கதைகள் மற்றும் ஆன்மீகத் தேடலுக்கு ஏற்ற புத்தகம்.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 210
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

கம்ப ராமாயணத்தை நவீன, இளம் சமூகத்துக்கு அறிமுகம் செய்யும் முயற்சி இது. சிடுக்கான செய்யுள்களை எளிய சிறுகவிதைகளாக வனைந்திருக்கிறது இந்நூல். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான‌ இடைவெளியை மொழியின் வசதி கொண்டே நிரப்பி இருக்கிறார் உரையாசிரியர். பால காண்டத்தின் முதல் ஆறு பகுதிகளான பாயிரம், ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியற் படலம் ஆகியன அடங்கிய இதில் கற்பனை வீச்சும், செறிந்த மொழியும் கொடிகட்டிப் பறக்கின்றன. பண்டைய பாரதத்தின் மண், மக்கள் மற்றும் மன்னன் பற்றி மிக விரிவாகப் பேசும் இப்புத்தகத்தில் ஆன்மீகம் என்பது இரண்டாம் பட்சம்தான். எனவே இந்து சமூகம் மட்டுமின்றி, மாற்று மதத்தோரும் கடவுளை நம்பாதோரும் கூட இதை வாசிக்கலாம்.