Skip to content

மாற்றுப் பாதையில் ஒரு பயணி

யவனிகா ஸ்ரீராம் எழுதிய மாற்றுப் பாதையில் ஒரு பயணி - வாழ்க்கையின் அர்த்தம், தனிமை மற்றும் தேடலை உணர்த்தும் கவிதை நூல். புதிய பாதையில் பயணிக்கத் தூண்டும் புத்தகம்.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society → Rural Living

Description

அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்க
பல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றன
கருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன்
முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தை
அது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும்
கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்தால்
ஒரு நீண்ட பகல் பொழுதை மகிழ்ச்சியுடன்
அதற்கு ஒப்புக்கொடுப்பேன்
ஒரு லாரி டிரைவரின் வெகுதூரங்களுக்கும்
அணைகளில் வளர்ப்பு மீன்களுக்கு வலை வீசுபவரின்
துள்ளும் புலர்காலைக்கும்
பள்ளிக்குச்செல்லும் சிறார்கள் விடியும் வரை
மூங்கில் கூடைகளில் பூப்பறிக்க
தலைச் சும்மாட்டில் கட்டிய டார்ச் ஒளி மங்கும் பொழுது
இரவு ஷிப்ட் முடிந்து நூற்பாலைப் பேருந்துகள்
பெண்களை ஊருக்குள் இறக்கி விடும் தலைகலைந்த வேளையில்
பால் வேகன்கள் ஹார்ன் ஒலிக்க
பத்திரிக்கைக் கட்டுகளைப்பிரித்தனுப்பும் இடத்தில்
இரையும் ஒரு தேனிர் பாய்லர் முன்பு பற்கள்
நடுங்கக் கதகதப்புடன் குளிர்காலத்திற்கு முகமன் சொல்கிறேன்