கழி ஓதம்
ரம்யா அருண் ராயன் எழுதிய கழி ஓதம் - மனதின் ஆழமான உணர்வுகளைக் கதைகளாக்கும் தொகுப்பு. கழி ஓதம் கதைகள் உங்கள் உள் உலகத்தை உயிர்ப்பிக்கும், புதிய அனுபவங்களைத் தரும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 140 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
Description
'கழி ஓதம்' என்பது கடலின் நீர்மட்டம் உயருகிற சமயங்களில், கழிமுகங்களில் கடல்நீர் பெருக்கெடுத்துப் புகுவது ஆகும். அவ்வாறே இத்தொகுப்பில் என் மன உணர்வுகள் இந்த பன்னிரு கதைகளைக் கழிமுகமாக்கிப் புகுந்துள்ளன. என்வரையில் இக்கதைகள் எதுவும் முடிந்துவிடவில்லை. இந்த பன்னிரு கதைகளின் தொடர்ச்சியான நிகழ்வுகள், எனக்குள் உருவாகியுள்ள பன்னிரு உலகங்களுக்குள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் வாசித்துமுடிக்கும்போது உங்களுக்குள்ளும் அதுபோல நிகழ்ந்தால்... உங்களுக்குள் உருவாக்கும் உலகங்களும், எனக்குள் உருவாகும் உலகங்களும் என்றாவது சந்திக்க நேரலாம். அன்று நாம் நம் உணர்வுகளால் ஒருவரையொருவர் தரிசிப்போம்!