Skip to content

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1)

அ. மார்க்ஸ் எழுதிய காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1) - காந்தியின் வாழ்க்கை, சனாதனத்தின் எதிர்ப்பு, மற்றும் சமூக சீர்திருத்தங்கள் குறித்த ஆழமான வரலாற்றுப் பார்வை.

Category History
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

காந்தி ஒரு தீவிரமான செயல்பாட்டாளர் மட்டுமல்ல. மிக்க நவீனமான  சிந்தனையாளரும் கூட. வரலாறு காணாத வகையில் பெருந்திரளான மக்களைக் களத்தில் இறக்கியவர். காந்தியைப் பகைத்தவர்களும், வெறுத்தவர்களும், கொன்றவர்களும்தான் சனாதனிகள்.. பிரிட்டிஷ்காரர்களைக் காட்டிலும் சனாதனம் காந்தியையே எதிரியாகக் கண்டது. அவருக்கு எதிராக மதபீடங்கள் பத்திரிக்கைகள் நடத்தின. ஆபாசமாக அவரை ஏசி நூல்கள் வெளியிட்டன. தன்னுடைய கட்சியினர் தேவதாசிமுறையை ஆதரித்தபோது காந்தி அதை எதிர்த்தவர்களுடன் நின்றார். நான் கோமாதாவை வணங்குபவன். ஆனால் என்னுடைய கடவுள் எப்படி இன்னொருவரின் கடவுளாக இருக்க முடியும் எனக் கேட்டார். பதில் சொல்ல இயலாதவர்கள் அவரைக் கொன்றார்கள். காந்தியின் பன்முகப் பரிமாணங்களை வெளிக் கொணரும் இந்நூலின் இந்த ஐந்தாம் பதிப்பு திருத்தி விரிவு செய்யப்பட்டு இரு பெரும் தொகுதிகளாக இப்போது வெளிவருகிறது.