என் அடையாரின் விழுதுகள் – பாகம் 2
ஜெயராமன் ரகுநாதன் எழுதிய என் அடையாரின் விழுதுகள் - பாகம் 2 - அடையாறு நினைவுகள், குடும்ப வாழ்க்கை மற்றும் அறுபதுகளில் சென்னையின் இனிமையான அனுபவங்களை உணர்த்தும் நாவல்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் கார்ப்பரேட் எக்ஸிக்யூடிவ் பிறகு சுய தொழில் முனைவராக இருந்த ஜெயராமன் ரகுநாதன் எழுத்தாளராக வடிவெடுத்தபோது அவரது அனுபவமே அந்த எழுத்தில் மிளிர்ந்தது இயல்பான குடும்ப வாழ்க்கை அமையப்பெற்ற இவரது எழுத்தில் அறுபது எழுபதுகளில் சென்னை மற்றும் அடையாறு வாழ்க்கையில், சலசலக்கும் வெள்ளிக்காசுகளின் ஓசை இனிமையும் ஆற்று நீரின் வேக ஓட்டத்தில் மிதக்கும் இலைகளின் ராயசமும் வெளிப்படுவதை உணரலாம்.
"அடையாறு என்பது எனக்கு மீண்டும் மீண்டும் கனவுகளில் வரும் முகங்களும் அவை வீசி எறிந்துவிட்டுப்போகும் நினைவுகளுமே. எல்லா விதங்களிலும் என்னை ஆட்கொண்ட அந்த நினைவுகளிலிருந்து நான் மீளப்போவது இல்லை. மீளவும் விருப்பம் இல்லை. உங்களின் வஊரையும் இளமைக் காலப் பள்ளி அனுபவங்களையும் ஆதர்ச மனிதர்களையும் மறக்கவே முடியாத அதீத சந்தோஷங்களையும் உடனே மறந்துவிட்ட ஏமாற்றங்களையும் இதில் நிச்சயம் பொருத்திப்பார்த்து அந்த தினங்களை உங்களால் மறுவாழ் செய்யமுடியும் என்று உத்தரவாதமாக நம்புகிறேன் என்று அடையாறு பற்றி இவர் உணர்ச்சியுடன் பேசுவதன் தாக்கம் இவரது வரிகளிலும் ரசிக்க முடியும்.