Skip to content

தேவதை புராணம் (எழுத்து பிரசுரம்)

சி. சரவணகார்த்திகேயன் எழுதிய தேவதை புராணம் - பெண்மையின் காதல் உணர்வுகளை 150 சிறுகவிதைகளில் விவரிக்கும் அழகான படைப்பு. காதல், கவிதை பிரியர்களுக்கு ஏற்றது.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

2011ல் தமிழ்பேப்பர் தளத்தில் தினசரித் தொடராக பா. ராகவன் இதை வெளியிட்டார். இங்கே ஒரு பெண் காதல் செய்கிறாள். பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம் பெண் என ஏழ்பருவங்களிலும் மாறுதலுறும் மனதையும் உடலையும் வைத்துக் கொண்டு விதவிதமாகக் காதலிக்கிறாள். அதைத் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள். அந்தப் புலம்பல்களே இந்த 150 சிறுகவிதைகள். காதல் எனும் செந்தீயில் சொர்ணம் உருகுவது போல் இதில் பெண்மை துளித்துளியாய் வழிகிறது. ஏதேன் தோட்ட ஏவாள் போல ஆர்வத்துடன் ஒருபுறமும் நாளை உலகம் அழியப் போகும் ஆவேசத்துடன் மறுபக்கமும் காதலில் திளைக்கிறாள். அவள் தேவதை ஆவதே தன் காதலின் வழிதான்!