Skip to content

ஆண்டான்

சி. சரவணகார்த்திகேயன் எழுதிய ஆண்டான் - காதல், பக்தி, மோட்சம் குறித்த ஒரு காவிய நாவல். நரன்-இறைவி காதல், கைலாயத்தை கலங்கடிக்கும் கதை!

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

ஒரு நரன் இறைவியைக் காதலிக்கிறான். பராசக்தி மீதான பக்தி பிறழ்ந்து பெரும் பித்து பிறக்கிறது, மோகத்துக்கும் மோட்சத்துக்கும் மத்தியில் தவமனம் தாண்டவமாடுகிறது. அமர காதலின் வழி அம்மன் உளத்துக்கு அணுக்கம் ஆகிறான் மானுடன் - பலனாய் கைலாயம் கலங்குகிறது, சதுர்வர்ணம் பதறுகிறது. சாமிக்குச் சூடித் தந்த சுடர்க்கொடி ஆண்டாள் ஆனாள் - கன்னி தெய்வத்தின் தழல் தீண்டியவன் ஆண்டான் ஆனானா?

காவிக்கும் கறுப்புக்கும் இடையேயான சாஸ்வதச் சமரின் காலத்துளி இப்புனைகதை. பாரதியின் மீசையும் பெரியாரின் தாடியும் ஒருமுகமாகும் அற்புதம் இதில் நிகழ்கிறது. நவீன மொழியில், நாவல் வடிவில் அரங்கேற்றப்பட்டுள்ள காவியம் - The Odyssey of CSK!