தமிழ்நாட்டு வரலாறு
சங்க காலம் முதல் திராவிட இயக்கங்கள் வரையான தமிழகத்தின் துல்லியமான விரிவான வரலாறு
கே. ராஜய்யன் எழுதிய தமிழ்நாட்டு வரலாறு - தமிழரின் பண்பாடு, வரலாறு மற்றும் அடையாளத்தை மறு கண்டுபிடிக்கும் ஒரு முழுமையான ஆய்வு.
| Category | History |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 517 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை. தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது. களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில்தான் குறளும், சிலம்பும், மேகலையும் உருக்கொண்டன. அது சமண – பௌத்தர் மேலோங்கியிருந்த காலமாதலால், இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது. பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1800 – 1801 தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது. பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக – பாதக அம்சங்களுடன் பரிசீலித்து, துல்லியமானதும், முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.