Skip to content

ஏழரைப்பங்காளி வகையறா

எஸ். அர்ஷியா எழுதிய ஏழரைப்பங்காளி வகையறா - தமிழ் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுப்பூர்வமான கதை, உறவுகளின் ஆழத்தையும் நல்குரவின் வலியையும் அழகாகச் சொல்கிறது.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 371
Year 2016
Format Paperback
Tags Life and Society

Description

அர்ஷியாவின் முதல் நாவலான இந்த 'ஏழரைப் பங்காளி வகையறா' தமிழ் – உருது முஸ்லிம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஒரு உணர்ச்சிச் சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்குரவு எனும் இடும்பையை ,மடி எனும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கிக் தந்திருக்கிறது. அந்த சோகங்களை உள்வாங்கிக் கொண்டு, ஆனால் அதையும் தாண்டி மனித உறவுகள் இறுக்கமாகப் பின்னப்பட்டிருக்கின்றன என்பதை – ஒரு புதிய எடுத்துரைப்பியல் உத்தியோடு- அழகாக காட்டுகிறது.

அதனால் தான் இந்த நாவல் பலருடைய கவனிப்புக்கும் விருப்பத்துக்கும் உரியதாக இங்கே முன் வைக்கப்படிருக்கிறது.

- தி. சு. நடராசனின் முன்னுரையிலிருந்து